Thursday, March 17, 2011

ITS BATH TIME!!!

குளியலறையின் வெளி மற்றும் உள் தாழ்ப்பாள் உயரத்தில் இருக்குமாறு வைக்கவும். இவ்வாறு செய்வதால் குழந்தைகள் தனியாக குளியலறைக்குள்ளே செல்லவோ உள்ளே சென்று தாள் போட்டு கொள்ளவோ முடியாது




குழந்தைகள் நீரில் மூழ்குவதற்கு சிறிய அளவு தண்ணீரே போதுமானது,

DANGEROUS


 எனவே bath tub பயன்பாட்டில் இல்லாத போது  நீரை நிரப்பி வைக்காதீர்கள்.
குளிப்பாட்ட பயன்படுத்தும் சுடுநீர் எவ்வளவு சூடாக இருக்கிறது என்பதை உங்கள் பின்னங்கையில் சோதித்து விட்டு குழந்தையின் மேல் ஊற்றவும்


குளிப்பாட்டும்போது தொலைபேசியோ வாசல் அழைப்பு மணியோ அடித்தால் முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள், தவிர்க்க முடியாத நிலையில் குழந்தையை துண்டில் சுற்றிக்கொண்டு உங்களுடன் எடுத்து செல்லுங்கள்.


குளியலறையில் வழுக்காத தரைபதிப்புகளை போடுவது நல்லது.
சோப்பு, ஷாம்பு, சவரம் செய்ய பயன்படுத்தும் பிளேடுகள், after shave lotion டூத் பேஸ்ட் முதலியவற்றை எட்டாத இடத்தில் பூட்டி வைக்கவும்
குளியலறை மற்றும் டாய்லெட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பினாயில் ஆசிட் போன்றவைகளை எட்டாத இடத்தில் பூட்டி வைக்கவும்.


    

2 comments:

  1. These steps would really help the parents to take care their children.

    ReplyDelete
  2. thanks sudhan !feel free to ask the topics u would like to know in child rearing.

    ReplyDelete