Sunday, March 6, 2011

பச்சிளம் குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்யலாமா?


முதல்  மாதத்தில்  ஆயில்  மசாஜ்  செய்வதை  தவிர்க்கவும்.  எடை  குறைவாக  பிறந்த  குழந்தை  எனில்  குழந்தை  3 கிலோ  எடை  வரும்வரை 
காத்திருக்கவும்
மசாஜை சரியான முறையில் செய்தால் எல்லா குழந்தைகளும் மசாஜை சுகமாக உணரும்.


காது, கண்  மற்றும் மூக்கில் எண்ணெய் விடகூடாது.அதிகமாக  எண்ணெய் ஒழுகும்படி தலையில் எண்ணெய் தேய்த்து விட கூடாது

தேங்காய்  அல்லது ஆலிவ் ஆயில்  கொண்டு  மசாஜ்  செய்யலாம்.மசாஜ் செய்யும்போது குழந்தையுடன் பேசிக்கொண்டே செய்வது நல்லது. முடிந்தால் காலை வெயிலில் சிறிது நேரம் குழந்தையை காட்டலாம். வைட்டமின் D சத்து குழந்தைக்கு கிடைக்கும்.

வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு குளிப்பாட்டவும்.
இவ்வாறு செய்வதால் குழந்தையின்  உடலில்  இரத்த  ஓட்டம்  நன்றாக   இருக்கும் , நன்றாக  தூங்கும்,அழுவது  குறைவாக  இருக்கும் குழந்தையின் எடைகூடுவது நோய் எதிர்ப்பு சக்தி கூடுவது போன்ற நன்மைகள் ஏற்படும்.
   

No comments:

Post a Comment