Saturday, July 2, 2011

குழந்தைகளுக்கு பசும்பால் எப்போது கொடுக்கலாம்?

குழந்தைகளுக்கு 1 வயதிற்கு பிறகுதான் பசும்பால் கொடுக்கவேண்டும்.
ஏனெனில் பசும்பாலில் புரதம், கொழுப்பு மற்றும் உப்புசத்து அதிக அளவில் இருக்கிறது.ஒரு வயதிற்கு குறைவான குழந்தையின் சிறுநீரகம் முழுமையாக முதிர்ச்சி அடைந்திருப்பதில்லை, எனவே பசும்பாலில் உள்ள சத்துகளை செரித்து உறிஞ்சி கொள்ளுவது கடினம். மேலும் பசும்பாலில் இரும்பு சத்து மிகவும் குறைவாக இருக்கிறது, இதனால் அதிகமாக பசும்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு இரத்த சோகை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதிகமாக பசும்பால் குடிக்கும் குழந்தைகள் திட உணவுகள் சரியாக உண்ணுவதில்லை. அமெரிக்க குழந்தைகள் மருத்துவ கழகம் ஒரு வயதிற்கு பிறகே பசும்பால் கொடுக்கலாம் என பரிந்துரைக்கிறது.