Thursday, February 24, 2011

WATERING OF EYES IN NEWBORN


பச்சிளம் குழந்தைகளுக்கு கண்ணில் நீர் வருவது சாதாரண பிரச்சனையே

 நமது கண்ணில் கண்ணீர் எப்போதும் சுரந்து கொண்டே இருக்கும். ஆனால் அது நமக்கு தெரிவதில்லை, காரணம் கண் இமையில் உள்ள ஒரு துவாரம் மூலமாஅது தொடர்ச்சியாக மூக்கின் வழியாக கண்ணிலிருந்து வெளியே
வருகிறது. இந்த துவாரத்தில் அடைப்பு இருந்தால் கண்ணில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும்.

சாதாரண மசாஜ் மூலம் இதனை எளிதில் சரி செய்ய முடியும். கண்ணின்  உள்புறத்தில்  இருந்து கீழ் நோக்கி  மூக்கின்  வழியாக விரலால் மசாஜ் செய்யவும் . காலை மாலை  10 முறை தினமும் செய்ய வேண்டும்
 விரலில் நகம் இருந்தால் வெட்டி விட்டு  மசாஜ் செய்யவும்.

 இவ்வாறு ஒரு மாதம் தொடர்ந்து  செய்ய  வேண்டும் . தொடர்ந்து  நீர்  வடிந்தால்  மருத்துவரை அணுகவும் . கண்ணில்  வெள்ளையாக பூளை  அல்லது  அழுக்கு  வந்தால்  மருத்துவரிடம்  காண்பித்து  சொட்டு  மருந்து  விடலாம் .

No comments:

Post a Comment