Wednesday, February 23, 2011

KIDS AND PETS


வளர்ப்பு பிராணிகள் வாங்குவதற்கு முன் கவனிக்க :
 செல்ல பிராணிகள் அனைவர்க்கும்
மிகவும் நல்ல துணைவனாக இருக்கும்.

 ஆனால் சிறிய குழந்தைகள்  வளர்ப்பு
பிராணியை சரியாக கையாள தெரியாமல் அவைகளை தூண்டிவிடுவதன்
 மூலம் அதனிடம் கடிபட நேரிடும்.
எனவே குழந்தைகளுக்கு ஐந்து வயதாகும்வரை காத்திருப்பது நல்லது .
வளர்ந்த பிராணிகள் நல்லது. குட்டி நாய்,மற்றும் பூனை போன்றவை
 விளையாட்டாக குழந்தைகளை கடிக்க வாய்ப்பு உள்ளது .வளர்ப்பு
பிராணிகளை அன்போடு வளர்க்கவும். 
குழந்தை தன் முகத்தை பிராணிகளின் முகத்தோடு உரச அனுமதிக்காதீர்கள்.

ALL PETS SHOULD BE GIVEN RABIES VACCINATION

   

குழந்தையை வளர்ப்பு பிராணிகளுடன் தனியாக விளையாட விடாதீர்கள்.
வளர்ப்பு பிராணிகளை எரிச்சலூட்டும் வகையில் குழந்தைகள் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.

 நாய் அல்லது பூனையின் வாலை இழுப்பது, அவற்றின் உணவை எடுத்து கொண்டு ஓடுவது போன்ற செயல்களை செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள்.
நாய் துரத்தி கொண்டு வந்தால் ஓடினால் அது தொடர்ந்து விரட்டும், கடிக்கவும் செய்யும். எனவே குழந்தைகளை ஓடவேண்டாம் என சொல்லிகொடுக்கவும்.

செல்ல பிராணிகள் தூங்கும்போதும் சாப்பிடும்போடும்  அதை தொந்தரவு செய்ய கூடாது. 

 குழந்தைகளுக்கு பிராணிகளுடன் பழகும்விதம் பற்றி சொல்லிகொடுக்கவும்.
குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்ற வியாதிகளிருந்தால் நாய் பூனை வளர்ப்பதை தவிக்கவும்.
குழந்தையின் படுக்கை அறையில் செல்ல பிராணிகளை அனுமதிக்காதீர்கள். 

No comments:

Post a Comment