Saturday, October 8, 2011

sleepy time !!!

தூக்கம் குழந்தையின் வளர்ச்சிக்கும், மூளை சுறுசுறுப்பு திறனுக்கும் மிகவும் அவசியமானது. நமது மூளையின் நினைவாற்றலை short term memory மற்றும் long term memory என பிரிக்கலாம்.  short term memory என்பது குறுகிய காலத்திற்கு மட்டும் நினைவில் இருக்கும். ஆனால் long term memory என்பது நீண்ட காலத்திற்கு நினைவில் இருக்கும், தூக்கம் நாம் கற்று கொண்ட ஒரு விஷயத்தை short term memory இலிருந்து  long term memory ஆக  மாற்றுவதற்கு  உதவி செய்கிறது 

குழந்தைகள் எவ்வளவு  நேரம் தூங்க வேண்டும்  என எனது பழைய பதிவில் கூறி இருக்கிறேன். தூக்கம் நன்றாக வரும் குழந்தையை படுக்கையில் படுக்க வைத்தால் சிறிது நேரம் புரண்டு அழுதுவிட்டு தூங்கிவிடும்.  குழந்தைகள் தூக்கத்திற்கு அழும்போது குழந்தையை தூங்க வைக்க தோளில் படுக்க  வைத்து கொண்டு நடப்பது, தொட்டிலை ஆட்டுவது, பால்  கொடுப்பது போன்ற வழிமுறைகளை பெற்றோர்கள் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு  செய்வதால்  குழந்தை அந்த முறைக்கு பழகி விடுகிறது. குழந்தை தானாக தூங்க கற்று கொள்வதில்லை. பிறகு எப்போது தூக்கம் வந்தாலும் அதே போன்ற முறைகளை எதிர்பார்க்கும், தூங்கிய பிறகு படுக்கையில் படுக்க வைத்தால் இலேசான சத்தம் கேட்டாலும் எழுந்து கொள்ளும், பிறகு பெற்றோர்  அதே முறைகளை  கடைபிடிக்க வேண்டியிருக்கும். எனவே இப்படி செய்வதை தவிர்க்க வேண்டும்.

நான்கு வயது முதல் குழந்தைகள் நிறைய கேள்விகள் கேட்பார்கள், புதிய விஷயங்களை கற்று கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். எனவே எளிதில் தூங்க மறுப்பார்கள். 

சில பெற்றோர்கள் குழந்தைகளை பகலில் தூங்குவதற்கு வற்புறுத்துவது உண்டு. ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பகலில் தூக்கம் அவசியம் இல்லை, எனவேதான் ஐந்து வயதிற்கு பிறகு முழுநேர பள்ளி நடத்த படுகிறது.


குழந்தைகளை தூங்கவைக்க பயமுறுத்தும் கதைகள், தூங்கா விட்டால் பூச்சாண்டி வந்து பிடித்து கொண்டு போய்விடுவான் என்று கூறுவதை சில பெற்றோர்கள் கடைபிடிகிறார்கள், அவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு பல்வேறு பயத்தை உண்டுபண்ணும். சில மனிதர்கள், நிழல் போன்றவற்றை பார்த்து பயப்படுவார்கள்.



தூங்க வைப்பதற்கு சில பெற்றோர்கள் குழந்தைகளை அடிக்கிறார்கள். இவ்வாறு  செய்வதால் குழந்தைகளுக்கு சிறுவயது தூக்கம் பற்றிய பயமுறுத்தும் நினைவுகளை உண்டாக்கும்.

பதின்பருவ குழந்தைகள் தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும். ஏனெனில் இந்த வயதில்தான் அவர்களின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும், அதற்கு தேவையான ஹார்மோன்கள் தூங்கும் நேரத்தில்தான் அதிகமாக சுரக்கும். எனவே சரியான தூக்கம் மிகவும் அவசியம். ஆனால் இன்றைய போட்டி மிகுந்த உலகம் குழந்தைகள் அதிகமாக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற pressure  அவர்களை சரியாக தூங்க விடுவதில்லை. 
இன்றைய காலத்தில் mobile , internet  மூலம் தூக்கத்தை குறைத்து கொள்கிறார்கள். எனவே குழந்தையின் பெட்ரூமில் டிவி, கம்ப்யூட்டர் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது.

தூக்கும் நேரம் என்பது நேர விரயம் என பல பெற்றோர்கள் என்னிடம் கூறுவதை கேட்டிருக்கிறேன். நான் அவர்களிடம் சொல்வது இதுதான் '' நமது மூளையின் சுறுசுறுப்பு தன்மையை புதுப்பிக்க தூக்கம் மிகவும் அவசியம். எனவே தூங்கும் நேரம் விரயம் அல்ல என்பதுதான்''

தினமும் ஒரே நேரத்தில் தூங்க வைப்பது நல்லது .   

தூங்க வைப்பதற்கு முன்; 

இனிமேல் உங்கள் குழந்தையின் தூக்கத்தை சந்தோசமாக மாற்றுங்கள் 
SWEET DREAMS

Thursday, October 6, 2011

குழந்தைகளுக்கு மொட்டை எப்போது அடிக்கலாம்?


பச்சிளம் குழந்தைகளின் உச்சந்தலையில் Anterior  fontonelle  எனப்படும் சிறு பகுதி உள்ளது. இந்த பகுதியில் கபால எலும்பு இருக்காது, தோல் மற்றும் ஒரு தசை மட்டுமே மூளையை மூடிக்கொண்டு இருக்கும். இந்த  Anterior  fontonelle  முழுவதுமாக எலும்பாக மாறுவதற்கு குறைந்தது 12  மாதங்கள் ஆகும். 

குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கும் போது வலியினால் தலையை ஆட்டும், தவறுதலாக கத்தியினால் தலையில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு  Anterior  fontonelle  மூடாமல் இருப்பதால் இந்த பகுதியில் காயம் ஏற்பட்டால் மூளையில் வெட்டுபட வாய்ப்பு உள்ளது. இதனால் மூளையில் இரத்தகசிவு, வலிப்பு போன்றவை ஏற்படலாம்.
எனவே குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதாக இருந்தால் ஒரு வயதிற்கு பிறகு அடிக்கலாம்.

பின் குறிப்பு: என்னிடம் வந்த 12  நாள் குழந்தைக்கு மொட்டை அடித்திருந்ததை பார்த்த பிறகே இந்த பதிவு.

Friday, August 19, 2011

பேபி வாக்கர் பயன்படுத்தலாமா?


வாக்கர் பயன்பாடுதுவதால் குழந்தை சீக்கிரம் நடக்க ஆரம்பிக்கும் என்ற தவறான கருத்து மக்களிடம் இருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. மேலும் இது பாதுகாப்பானது அல்ல.குழந்தைகள் வாக்கரில் நடக்கும்போது வாக்கரில் உள்ள  சக்கரத்தினால் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓட ஆரம்பிக்கும். எனவே எதிரில் ஏதேனும் தடை இருந்தால் உடனே நிறுத்த முடியாமல் விபத்து ஏற்படலாம்.

ஒவ்வொரு வருடமும் இதனை பயன்படுத்தும்  நிறைய குழந்தைகள் விபத்துக்கு உள்ளாகிறார்கள். பல மரணங்களும் ஏற்பட்டு உள்ளன.எனவே வாக்கர் பயன் படுத்துவதை 
தவிர்க்கவும்.
STATIONARY WALKERS எனப்படும் சக்கரம் இல்லாத வாக்கர் பயன்படுத்துவதில் தவறில்லை








Thursday, August 11, 2011

ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுப்பது


ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுப்பது?

நான்கு ஆறு மாதம் முடியும் வரை தாய்பால் மட்டுமே உணவு, தண்ணீர் கூட தேவையில்லை.அதன் பிறகு தாய்பாலின் அளவு குழந்தையின் எடைக்கு போதுமான அளவு இருப்பதில்லை, எனவே இணை உணவு ஆரம்பிப்பது அவசியம். இந்த நேரத்தில் இணை உணவு ஆரம்பிக்காவிடில் குழந்தையின்  எடை சரியாக அதிகரிக்காது. அரிசி கஞ்சி, பருப்பு தண்ணீர், காய்கறி சூப் போன்றவற்றை ஒவ்வொன்றாக ஆரம்பிக்கலாம். முதலில் ஆரம்பிக்கும்போது காலை நேரத்தில் கொடுப்பது நல்லது. வாரத்திற்கு ஒரு புதிய உணவு வீதம் சேர்த்து கொள்ளலாம். முதல் உணவு எந்தவித சுவையும் இல்லாமல் bland ஆக இருப்பது நல்லது முதலில் குழந்தைகள் உணவை துப்பும், தொடர்ந்து தினமும் கொடுப்பதன் மூலம் குழந்தைகள் அந்த உணவை உண்ண பழகி கொள்ளும். வலுக்கட்டாயமாக உணவை திணிக்க கூடாது. விளையாட்டு காண்பித்து கொண்டே கொடுக்க வேண்டும். குழந்தைக்கு  ஒருவயது ஆன பின்பு குழந்தை தானாக எடுத்து உண்ண ஆரம்பிக்கும். இந்த வயதில் குழந்தையை தானாக உண்ணும்படி  ஊக்குவிக்க வேண்டும்.

6 -8 மாதம்: அரிசி கஞ்சி, கோதுமை கஞ்சி, கேழ்வரகு கஞ்சி, வாழைபழம், வேகவைத்து  மசித்த உருளை கிழங்கு, இட்லி, வேக வைத்து மசித்த காய் கறிகள், பருப்பு சாதம்,கீரை சாதம்,  பிஸ்கட்  

9 - 10 மாதம்: முட்டை - மஞ்சள் கரு அதன் பின் வெள்ளை கரு, உப்புமா, பாயாசம், ஊறவைத்த சப்பாத்தி, வேகவைத்து மசித்த நிலகடலை,கொண்டைகடலை, பட்டாணி.

11 - 12 மாதம்: non-veg  சூப், ஈரல், வேகவைத்து மசித்த  மாமிசம், மீன்
ஒருவயது குழந்தை வீட்டில் தயாரிக்கும் எல்லா உணவுகளையும் உண்ணலாம். கடினமான நன்கு மென்று சாப்பிடவேண்டிய உணவு பொருட்களை தவிர்க்கவும், உதாரணமாக நிலகடலை சுண்டல் பட்டாணி போன்றவை மூச்சு குழாயில் செல்ல வாய்ப்பு இருக்கிறது. எனவே இது போன்ற உணவுபொருட்களை நன்றாக  மசித்து கொடுப்பது நல்லது. இரண்டு வயதுக்கு பிறகு குழந்தை நன்றாக மென்று தின்ன  பழகும்  வரை   மசித்து கொடுப்பதே  நல்லது

Saturday, July 2, 2011

குழந்தைகளுக்கு பசும்பால் எப்போது கொடுக்கலாம்?

குழந்தைகளுக்கு 1 வயதிற்கு பிறகுதான் பசும்பால் கொடுக்கவேண்டும்.
ஏனெனில் பசும்பாலில் புரதம், கொழுப்பு மற்றும் உப்புசத்து அதிக அளவில் இருக்கிறது.ஒரு வயதிற்கு குறைவான குழந்தையின் சிறுநீரகம் முழுமையாக முதிர்ச்சி அடைந்திருப்பதில்லை, எனவே பசும்பாலில் உள்ள சத்துகளை செரித்து உறிஞ்சி கொள்ளுவது கடினம். மேலும் பசும்பாலில் இரும்பு சத்து மிகவும் குறைவாக இருக்கிறது, இதனால் அதிகமாக பசும்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு இரத்த சோகை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதிகமாக பசும்பால் குடிக்கும் குழந்தைகள் திட உணவுகள் சரியாக உண்ணுவதில்லை. அமெரிக்க குழந்தைகள் மருத்துவ கழகம் ஒரு வயதிற்கு பிறகே பசும்பால் கொடுக்கலாம் என பரிந்துரைக்கிறது.

Sunday, May 29, 2011

குழந்தைகளுக்கு AC பயன்படுத்தலாமா?


பொதுவாக AC என்றாலே குளிர்ச்சி, சளி பிடித்து விடும் எனவே AC பயன்படுத்தகூடாது என்ற தவறான கருத்து மக்களிடம் இருக்கிறது.
ஆனால் AC பயன்படுத்துவதால் வெளிக்காற்றில் உள்ள தூசு மற்றும் நோய் உருவாக்கும் சில நுண்கிருமிகள் அறைக்குள் வராமல் தடுக்க படுகிறது.

வெயில் காலத்தில் அறையின் வெப்பத்தை ஒரே சீராக வைத்து இருப்பதால் உடலுக்கு அசௌகரியம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

பச்சிளம் குழந்தைகள் இருக்கும் அறையில் AC யை 28 முதல் 30 டிகிரி செல்சியஸ் அளவில் வைப்பது நல்லது 

பச்சிளம் குழந்தையின் உடல் வெப்பம் குறைந்தால் குழந்தையின் கை மற்றும் கால் பாதம் முதலில் நீல நிறமாக மாறும், அவ்வாறு இருந்தால் குழந்தையை முதலில் அந்த அறையிலிருந்து வெளியே கொண்டு வரவும். குழந்தையை வெதுவெதுப்பான இடத்தில்   வைக்க வேண்டும்.

ஏற்கெனவே குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் AC பயன்படுத்தினால் மூக்கடைப்பு எளிதில் ஏற்படும், இதுபோன்ற சமயங்களில் nasal drops போட்டு கொள்ளலாம். இது பலனில்லாமல் போனால் AC பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. 

அலர்ஜி, ஆஸ்த்மா இருந்தாலும் AC பயன்படுத்தலாம். ஆனால் அறையின் வெப்பம் 28 முதல் 30 டிகிரி அளவில் வைத்து கொள்வது நல்லது. AC யை வருடத்திற்கு ஒருமுறையாவது சர்வீஸ் செய்யவேண்டும். பில்டரை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.


Sunday, May 1, 2011

வளர்ச்சி வலி(GROWING PAIN)


இது 3  வயது முதல் 5 வயது மற்றும் 8 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வரும்.
கணுக்கால், கெண்டைகால் தொடை போன்ற இடங்களில் அதிகமாக வலி இருக்கும்.
காலில் வீக்கமோ, கால் சிவந்தோ இருக்காது.
வலி சில நிமிடம் முதல் சில மணி நேரம் வரை இருக்கும் 
பொதுவாக வலி தினமும் இருக்காது,
மாலை நேரம் அல்லது இரவில் வலி ஏற்படும் 
காலையில் வலி சரியாகி விடும் 
குழந்தைகளுக்கு வலி இருந்தாலும் நொண்டி கொண்டு நடக்க மாட்டார்கள்  
மசாஜ் செய்தால் வலி குறையும்
இதனால் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது 
தினமும் குழந்தை அழுவதால் பெற்றோர்களுக்கு கஷ்டமாக இருக்கும், ஆனால் இந்த வலியை சில எளிதான முறைகளால் சரி செய்து விடலாம் 

வலியை  குறைக்க என்ன செய்யலாம்?

வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்
மசாஜ் செய்யலாம் 
வலி நிவாரண ஜெல் தடவலாம் 
அதிக வலி இருந்தால் வலி நிவாரண மருந்துகள்(பாராசிடமால்) உட்கொள்ளலாம் 

கால் மூட்டுகளில்வலியோ  வீக்கமோ, சிவந்து இருந்தாலோ 
காலையில் வலி இருந்தாலோ 
ஜுரம் இருந்தால் 
குழந்தை நொண்டிக்கொண்டு நடந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.