Sunday, May 29, 2011

குழந்தைகளுக்கு AC பயன்படுத்தலாமா?


பொதுவாக AC என்றாலே குளிர்ச்சி, சளி பிடித்து விடும் எனவே AC பயன்படுத்தகூடாது என்ற தவறான கருத்து மக்களிடம் இருக்கிறது.
ஆனால் AC பயன்படுத்துவதால் வெளிக்காற்றில் உள்ள தூசு மற்றும் நோய் உருவாக்கும் சில நுண்கிருமிகள் அறைக்குள் வராமல் தடுக்க படுகிறது.

வெயில் காலத்தில் அறையின் வெப்பத்தை ஒரே சீராக வைத்து இருப்பதால் உடலுக்கு அசௌகரியம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

பச்சிளம் குழந்தைகள் இருக்கும் அறையில் AC யை 28 முதல் 30 டிகிரி செல்சியஸ் அளவில் வைப்பது நல்லது 

பச்சிளம் குழந்தையின் உடல் வெப்பம் குறைந்தால் குழந்தையின் கை மற்றும் கால் பாதம் முதலில் நீல நிறமாக மாறும், அவ்வாறு இருந்தால் குழந்தையை முதலில் அந்த அறையிலிருந்து வெளியே கொண்டு வரவும். குழந்தையை வெதுவெதுப்பான இடத்தில்   வைக்க வேண்டும்.

ஏற்கெனவே குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் AC பயன்படுத்தினால் மூக்கடைப்பு எளிதில் ஏற்படும், இதுபோன்ற சமயங்களில் nasal drops போட்டு கொள்ளலாம். இது பலனில்லாமல் போனால் AC பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. 

அலர்ஜி, ஆஸ்த்மா இருந்தாலும் AC பயன்படுத்தலாம். ஆனால் அறையின் வெப்பம் 28 முதல் 30 டிகிரி அளவில் வைத்து கொள்வது நல்லது. AC யை வருடத்திற்கு ஒருமுறையாவது சர்வீஸ் செய்யவேண்டும். பில்டரை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.


3 comments: