Tuesday, March 18, 2014

சிறுநீர் போகும்போது அழும் குழந்தை



பச்சிளம் குழந்தைகள் பிறந்த சில மாதங்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது  அழுது கொண்டு இருக்கும். இது இயல்பான ஒன்று, இதற்கு கவலைப்பட தேவையில்லை. ஆனால் குழந்தைக்கு காய்ச்சல் இருந்தாலோ, வாந்தி, பால் சரியாக குடிக்க வில்லை என்றாலோ உடனே மருத்துவரை அணுகவும்.

வெயில் நாட்களில் சில குழந்தைகள்
 சிறுநீர் அளவு குறைவாக செல்லும்
போது அழுவார்கள். இதற்க்கு நிறைய தண்ணீர்,
 ஜுஸ், மோர் தர்பூசணி
போன்றவை கொடுத்தால் சரியாகி விடும்.




URINARY  INFECTION இருந்தால் குழந்தைகளுக்கு சிறுநீர் சொட்டு சொட்டாக, அடிக்கடி  வரும்.  சிறுநீர் போகும்போது குழந்தை அழுது  கொண்டே இருக்கும்.ஜுரம் வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்படலாம்


சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர் குழாயில் கல் இருந்தாலும் சிறுநீர் கழிக்கும் போது குழந்தைகள் அழும்

குழந்தைகளின் பிறப்பு உறுப்பில் ஏதேனும் காயம் அல்லது RASH இருந்தாலும் குழந்தை அழுது கொண்டே சிறுநீர் கழிக்கும். 

No comments:

Post a Comment